1: ஊட்டி ஏரி வழிகாட்டுதல்

2: தாவரவியல் பூங்கா வழிகாட்டுதல்


3: தொட்டபெட்டா சிகரம் வழிகாட்டுதல

4: எமரால்டு ஏரி வழிகாட்டுதல்

5: முதுமலை தேசியப் பூங்கா வழிகாட்டுதல்


6: ரோஜா தோட்டம் வழிகாட்டுதல்

அரசு நடத்தும் ரோஜா தோட்டம் (Rose Garden) ஊட்டியில் மிகவும் பிரபலமானதாகும். ஊட்டியின் பெருமை என்று அழைக்கப்படும் ரோஜா தோட்டம் உலக ரோஜா சங்கங்கள் கூட்டமைப்பின் தெற்காசியாவுக்கான சிறந்த தோட்டத்திற்கான விருதை வென்றுள்ளது. தமிழக அரசால் பராமரிக்கப்படும் இந்த ரோஜா தோட்டத்தில் இந்தியாவிலேயே அதிக வகை ரோஜாக்கள் உள்ளன. 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் 20,000-க்கும் அதிக வகையான ரோஜாக்களைக் கொண்ட இந்தத் தோட்டம் ஐந்து மொட்டை மாடிப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஹைபிரிட் டீ ரோஜாக்கள், ரேம்ப்ளர்கள், மினியேச்சர் ரோஜாக்கள், பச்சை ரோஜாக்கள், கருப்பு ரோஜாக்கள், பாப்பாஜினோ மற்றும் ஃப்ளோரிபுண்டா போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கலாம். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பூக்கள் பூத்துக் குலுங்கும்.
7: தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தேயிலைத் தொழிற்சாலை
வழிகாட்டுதல்

ஊட்டி நகரம் முழுவதும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தேயிலை தொழிற்சாலை ( Tea Museum and Tea Factory) ஆகியவை ஊட்டியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாகும். தொட்டபெட்டா சிகரத்திற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்ட காட்சி முனை (வியூ பாயின்ட்) பார்க்க வேண்டிய ஒன்றாகும். தொழிற்சாலையில் முழு தேயிலை உற்பத்தி செயல்முறையையும் நீங்கள் காணலாம். ஒரு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பசுமையான நீலகிரியின் மடியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில், தேயிலை இலைகளை உலர்த்துவது முதல் இறுதி பேக்கிங் வரையிலும், இலை முதல் தேயிலை வரையிலான உற்பத்திச் சுழற்சியையும் நீங்கள் காணலாம். தேயிலை அருங்காட்சியகம் பல்வேறு வகையான தேயிலை இலைகளை உருவாக்கும் செயல்முறை மற்றும் தேயிலையின் பரிணாம வளர்ச்சியை காட்சிப்படுத்துகிறது. நீங்கள் ஒரு மாதிரி கப் ஏலக்காய் தேநீர் அல்லது சாக்லேட் தேநீரையும் பருகி அனுபவிக்கலாம். நினைவுப் பரிசுக் கடையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக எடுத்துச் செல்ல பலவிதமான தேநீர் தூள்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
8: புனித ஸ்டீபன் தேவாலயம் வழிகாட்டுதல்

புனித ஸ்டீபன் தேவாலயம் (St Stephen’s Church) ஊட்டியில் பார்க்க வேண்டிய ஒரு கட்டிடக் கலை அற்புதமாகும். நீலகிரியில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றான இந்த தேவாலயம் அதன் விக்டோரியா கால கட்டிடக் கலை, கடிகார கோபுரம் மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட கண்ணாடி ஜன்னல்களுக்கு பெயர் பெற்றது. மற்ற காட்சிகளுடன், கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதைக் காட்டும் காட்சி மற்றும் மேரி குழந்தை இயேசுவை கைகளில் ஏந்தியக் காட்சி மிகவும் அபாரமானதாகும். கிறித்துவ மதத்தின் பெரிய குறியீட்டு அர்த்தங்கள் நிரம்பிய இறுதி இரவுணவு பற்றிய ஒரு பெரிய ஓவியம் இந்த தேவாலயத்தின் சுவர்களை மேம்படுத்துகிறது. சுவாரஸ்யமான உண்மை: மைசூர் போரில் ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை தோற்கடித்த பின்னர் அவரது அரண்மனையில் இருந்து பிரதான தூண் மற்றும் மரம் ஆகியவை யானைகளால் இங்கு கொண்டு வரப்பட்டது. தேவாலயத்தின் அமைதியான சூழல் பிரார்த்தனைக்கான ஓர் அழகான ஓய்விடமாக அமைந்துள்ளது.
9: கேத்ரீன், கல்ஹாத்தி மற்றும் பைக்காரா அருவி வழிகாட்டுதல்



அருவிகள் என்றாலே பிரமிப்பும் ஆச்சரியமும் அழகும் கலந்த பேருவகைகளை கிளப்புபவைதான். அதிலும் ஊட்டியில் உள்ள இந்த மூன்று அருவிகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஓர் அனுபவமாகும். இவை இயற்கை மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு ஏற்ற இடங்களாகும். ஊட்டியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள் அற்புதமான மலையேறு தலங்களாகவும் குடும்பங்கள் கண்டு களித்திட அருமையான சுற்றுலா ஸ்தலங்களாகவும் அறியப்படுகின்றன. கேத்ரீன் அருவி (Catherine Falls) அதன் வசீகரிக்கும் அழகுக்கு பெயர் பெற்றது. 250 மீட்டர் உயரத்திலிருந்து இறங்கும் பிரமிப்பூட்டும் அருவி மற்றும் சுற்றியுள்ள பசுமையான, அடர்த்தியான காடுகள் எந்த வித குறையும் கூற முடியாத இயற்கைப் பின்னணியைப் படைத்துள்ளது. ஊட்டியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்ஹாத்தி அருவி (Kalhatti Falls) பெல்லிகாவில் அமைந்துள்ளது. இந்த அருவி, பறவை ஆர்வலர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் அருவியின் உச்சிப் பகுதி முழு பள்ளத்தாக்கினையும் பார்க்கக் கூடிய மிக அற்புதமான வானுயுரக் காட்சியை உங்களுக்கு வழங்குகிறது. பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் பைக்காரா அருவி (Pykara Falls) நம் நினைவகத்திற்குள் பிடித்துவைக்க வேண்டிய ஒரு காட்சியாகும். 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்திலிருந்து வீசும் இந்த அருவி இரண்டு தனித்தனி பிரிவுகளாக உருவாகி பாறைகள் மீது பாய்வதற்கு முன்பு அடிப்பகுதியில் இணையும் அற்புதக் காட்சியைக் கொண்டது.
10: மாரியம்மன் கோயில் வழிகாட்டுதல்

ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோயிலின் அழகான, ஐந்து நிலை கோபுரம் மிகவும் கவர்ச்சிகரமானது. காளி தேவியின் ஒரு வடிவமாகக் கருதப்படும் மாரியம்மன், மகாமாயி அல்லது சீதளா கௌரி என்றும் அழைக்கப்படுகிறார், மேலும், இது மழைத் தெய்வமாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் மாரியம்மனின் சகோதரி காளியம்மனும் அருள்பாலிக்கிறார். தெய்வங்கள் சேர்ந்து நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், கோயிலில் தெய்வங்களை வணங்கும் திருவிழா நடத்தப்படுகிறது, அங்கு பக்தர்கள் தீமிதி வேண்டுதல் சடங்கு நிறைவேற்றுகின்றனர். இங்கு நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடன் இருப்பதால் இந்த மாரியம்மன் கோயில் (Mariamman Temple) தனிச்சிறப்பு வாய்ந்தது.
No comments:
Post a Comment